உள்ளூர் செய்திகள்

தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 3,993 பேர் விண்ணப்பம்

Published On 2022-07-09 09:29 GMT   |   Update On 2022-07-09 09:29 GMT
  • தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 3,993 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்
  • 4-ந்தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன.

அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், உடையார்பாளையம், செந்துறை ஆகிய கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதன் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் காலியாக உள்ள 64 இடைநிலை ஆசிரியர்கள், 41 பட்டதாரி ஆசிரியர்கள், 58 முதுகலை ஆசிரியர்கள் என மொத்தம் 163 ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை தற்காலிகமாக நியமனம் செய்ய தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து கடந்த 4-ந்தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அந்தந்த கல்வி மாவட்ட அலுவலர்கள் மூலமாகவும், நேரிலும், இணையதள முகவரிகள் மூலமாகவும் பெறப்பட்டன.

இதில், 64 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு 1,423 பேரும், 41 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு 1,441 பேரும், 58 முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு 1,129 பேரும் என மொத்தமுள்ள 163 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 3,993 பேர் விண்ணப்பித்துள்ளனர் என மாவட்ட கல்வித்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News