உள்ளூர் செய்திகள்

கடையில் சேலை திருடிய 2 பெண்கள் கைது

Published On 2022-08-27 09:03 GMT   |   Update On 2022-08-27 09:03 GMT
  • கடையில் சேலை திருடிய 2 பெண்களை கைது செய்தனர்.
  • சிசிடிவி கேமரா பதிவை வைத்து நடவடிக்கை

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவ மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரும் இவரது நண்பரும் சேர்ந்து ஜெயங்கொண்டம் பேருந்து நிலைய சாலையில் ஜவுளிக்கடை நடத்தி வருகின்றனர். கடையை இவரது மனைவி மேனகா மற்றும் பணியாளர்கள் சிலரும் ஜவுளி விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் 5 பேர் சேர்ந்து கடைக்கு வந்தனர். அவர்கள் அதிகமான சேலையை பார்த்து, கடைசியில் ஒரு சேலை மட்டும் வாங்கிச் சென்றனர். பின்னர் கடை பணியாளர்கள் சேலைகளை எடுத்து அடுக்கும் போது சில சேலைகள் காணவில்லை. இது குறித்து கடை உரிமையாளரிடம், விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

உடனடியாக உரிமையாளர், சிசிடிவி கேமரா பதிவை பார்த்து அதில் சிலர் சேர்ந்து துணிகளை எடுத்து மறைத்து செல்வது அறிந்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் சப் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து கல்லாத்தூர் தண்டலை கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி அஞ்சம்மாள் (வயது 35), ரமேஷ் மனைவி கல்பனா (40) ஆகியோரை கைது செய்தும் மற்றவர்களை தேடியும் விசாரணை செய்து வருகின்றனர்.காணாமல் போன துணிகளின் மதிப்பு ரூ. 6 ஆயிரம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News