டி.எஸ்.பி. தலைமையில் வருடாந்திர ஆய்வு பணி நடைபெற்றது.
ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு பணி
- போலீசாருக்கான வருடாந்திர ஆய்வு பணி ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி. முருகேசன் தலைமையில் நடைபெற்றது.
- அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த இந்த ஆய்வில் போலீசாருடைய கவாத்து மற்றும் உடை பொருள்கள் ஆய்வு நடைபெற்றது.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவல் துணை கண்காணிப்பாளர் உட்கோட்டத்திற்குட்பட்ட ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, ரெட்டியார்சத்திரம், கன்னிவாடி, செம்பட்டி மற்றும் போக்குவரத்து போலீஸ் நிலையம், அனைத்து மகளிர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீசாருக்கான வருடாந்திர ஆய்வு பணி ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி. முருகேசன் தலைமையில் நடைபெற்றது.
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த இந்த ஆய்வில் போலீசாருடைய கவாத்து மற்றும் உடை பொருள்கள் ஆய்வு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து தற்போது தமிழக அரசால் புதிதாக காவலர்களுக்கு பிரத்யேகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் காவலர் ஆப் குறித்தும், அதனை பயன்படுத்தும் முறை குறித்தும் போலீசாருக்கு சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமாரி எடுத்துரைத்தார்.
இதில் ஒட்டன்சத்திரம் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராஜன், இடையகோட்டை இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில், அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திலகா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.