உள்ளூர் செய்திகள்

நாங்குநேரி அருகே குளத்தில் மூழ்கி முதியவர் பலி

Published On 2023-04-21 09:12 GMT   |   Update On 2023-04-21 09:12 GMT
  • 3 மாதங்களுக்கு முன்பு சுடலைமுத்துக்கும், பலவேசத்திற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
  • தோட்டாக்குடி குளத்தில் முதியவர் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

களக்காடு:

நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு போலீஸ் சரகத்திற்குட்பட்ட ஆழ்வாநேரி, புதுக்குறிச்சியை சேர்ந்தவர் சுடலைமுத்து (வயது 55). இவருக்கு பலவேசம் என்ற மனைவியும், இந்து என்ற மகளும், சுப்பிரமணி என்ற மகனும் உள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சுடலைமுத்துக்கும், அவரது மனைவி பலவேசத்திற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து பலவேசம், கணவரை பிரிந்து, தனது மகன், மகளு டன் சொந்த ஊரான ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பொன்னங் குறிச்சிக்கு சென்று விட்டார். மனைவி, குழந்தைகள் பிரிந்து சென்று விட்டதால் சுடலை முத்து மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார். இதற்கிடையே கடந்த 19-ந் தேதி சுடலைமுத்து மாயமானார். அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களிலும் தேடி வந்தனர்.

இந்நிலையில் மூன்றடைப்பு அருகே உள்ள தோட்டாக்குடி குளத்தில் முதியவர் சடலம் கிடப்ப தாக மூன்றடைப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் அவர் மாயமான சுடலைமுத்து என்பதும், அவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News