ஸ்ரீபெரும்புதூர் அருகே கல்லூரி விடுதியில் என்ஜினீயரிங் மாணவி தற்கொலை
- மற்ற மாணவிகள் வந்த போது ஸ்வேதா தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
- போலீசார் விரைந்து வந்து ஸ்வேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டு கோட்டையில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இங்கு வேலூரை சேர்ந்த வேலு என்பவரது மகள் ஸ்வேதா(வயது19) விடுதியில் தங்கி படித்து வந்தார்.
மாணவி ஸ்வேதா கடந்த சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு உடன் தங்கி உள்ள மாணவிகள் ஆறுதல் கூறி வந்தனர். இந்நிலையில் விடுதி அறையில் தனியாக இருந்த மாணவி ஸ்வேதா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரத்துக்கு பின்னர் மற்ற மாணவிகள் வந்த போது ஸ்வேதா தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தினருக்கும், ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து ஸ்வேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவி ஸ்வேதாவின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. கல்லூரியில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.