உள்ளூர் செய்திகள்

பொன்னேரி அருகே அம்பேத்கர் சிலை உடைப்பு- போலீஸ் குவிப்பு

Published On 2023-01-02 09:57 GMT   |   Update On 2023-01-02 09:57 GMT
  • நெடுவரம்பாக்கம் ஊராட்சி காலனியில் சுமார் 6 அடி உயரம் கொண்ட அம்பேத்கரின் முழு உருவச்சிலை உள்ளது.
  • அம்பேத்கார் சிலை சேதப்படுத்தப்பட்டது குறித்து சோழவரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பொன்னேரி:

பொன்னேரியை அடுத்த நெடுவரம்பாக்கம் ஊராட்சி காலனியில் சுமார் 6 அடி உயரம் கொண்ட அம்பேத்கரின் முழுஉருவச்சிலை உள்ளது. இந்த சிலையை சுற்றிலும் இரும்பு கூண்டு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் நேற்று நள்ளிரவு வந்த மர்ம நபர்கள் இரும்பு கூண்டின் பூட்டை உடைத்தனர். மேலும் அம்பேத்கர் சிலையின் கை, முகத்தை உடைத்து சேதப்படுத்தி விட்டு தப்பி சென்று விட்டனர். இன்று காலை அப்பகுதி மக்கள் வந்து பார்த்தபோது அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அறிந்ததும் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அம்பேத்கார் சிலை சேதப்படுத்தப்பட்டது குறித்து சோழவரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அசம்பாவிதத்தை தடுக்க அப்பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு முன்பும் கடந்த ஆண்டு இதே சிலை சேதப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News