உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளுக்கு நினைவு பரிசு வழங்கினர்.

அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

Published On 2022-12-12 13:27 IST   |   Update On 2022-12-12 13:27:00 IST
  • அதிக மதிப்பெண்கள் பெற்ற அய்யலூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 30 மாணவ- மாணவிகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் கொடியேற்று விழா நடைபெற்றது.
  • 120 நலிவடைந்த முதியோர்களுக்கு சேலை, வேஷ்டிகள் வழங்கப்பட்டன.

வடமதுரை:

அய்யலூரில் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் சார்பாக முப்பெரும் விழா நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். திண்டுக்கல் மாநகரத் தலைவர் ஜெயக்குமார், திருச்சி மாவட்ட தலைவர் புரட்சிமணி, வடமதுரை ஒன்றிய செயலாளர் வடிவேல் முன்னிலை வகித்தனர்.

திண்டுக்கல் மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் வரவேற்றார். செயல் தலைவர் இளமுருகு முத்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். பின்னர் அம்பேத்கரின் உருவப்படம் திறக்கப்பட்டது. 120 நலிவடைந்த முதியோர்களுக்கு சேலை, வேஷ்டிகள் வழங்கப்பட்டன.

அதிக மதிப்பெண்கள் பெற்ற அய்யலூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 30 மாணவ- மாணவிகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் கொடியேற்று விழா நடைபெற்றது.

இதில் அய்யலூர் பேரூராட்சி தலைவர் கருப்பன், அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் அரசு ஊழியர் பிரிவு மாநில செயலாளர் மெய்யர், மாநில மகளிர் அணி செயலாளர் இலக்கிய செல்வி, மகளிர் அணி தலைவர் ஆசை தேன்மொழி, மாவட்டத் தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இளைஞர் அணி செயலாளர் மணிவேல் நன்றி கூறினார்.

Tags:    

Similar News