உள்ளூர் செய்திகள்

சேர்மன் ஜனகர் தலைமையில் யூனியன் கூட்டம் நடைபெற்ற போது எடுத்தபடம்.


ஆழ்வார்திருநகரி யூனியன் கூட்டம்

Published On 2022-08-23 07:12 GMT   |   Update On 2022-08-23 07:12 GMT
  • ஆழ்வார்திருநகரி யூனியன் கூட்டம் ஒன்றிய கூட்ட அரங்கில் நடைபெற்றது. யூனியன் சேர்மன் ஜனகர் தலைமை தாங்கினார்.
  • கூட்டத்தில் 37 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது

தென்திருப்பேரை:

ஆழ்வார்திருநகரி யூனியன் கூட்டம் ஒன்றிய கூட்ட அரங்கில் நடைபெற்றது. யூனியன் சேர்மன் ஜனகர் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பாலசுப்பிர மணியன், வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் ராஜாத்தி, அதிமுக உறுப்பினர் தானி. ஜெ. ராஜ்குமார், மல்லிகா, மாரிமுத்து, தாமஸ், நசரேன், பூல், சஜீதா, காந்திமதி உட்பட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் 37 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிறிஸ்டோபர் தாசன், ராஜா, ஶ்ரீதேவி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாலதி மாலாதேவி, பாலசுப்பிரமணியன், சித்ரா ஒன்றிய பொறியாளர்கள் வெள்ளப்பாண்டியன், சிவசங்கரன் சமுகநலம் வட்டார மேலாளர் செந்தில் வேல், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் சிதம்பர ராஜ், ஜெயச்சந்திர ராணி, முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News