உள்ளூர் செய்திகள்

பாவூர்சத்திரம் அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

Published On 2023-10-09 09:03 GMT   |   Update On 2023-10-09 09:03 GMT
  • நிகழ்ச்சியில் முன்னாள் மாணவ, மாணவிகள் தங்களது குடும்பத்தினரோடு கலந்து கொண்டனர்.
  • முன்னாள் மாணவ- மாணவிகளின் குழந்தைகள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர்.

தென்காசி:

பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1994 முதல் 1996-ம் ஆண்டு வரை கல்வி பயின்ற முன்னாள் மாணவ- மாணவிகள் 27 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் ஆசிரியர்களான சுவாமிதாஸ், முருகவேல், மேரி , மயில் அம்மாள், தற்போதைய தலைமை ஆசிரியர் அன்னக்கிளி ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னாள் மாணவ, மாணவிகள் அனைவரும் தங்களது குடும்பத்தினரோடு கலந்து கொண்டு, பள்ளி பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மேலும் முன்னாள் ஆசிரியர்களுக்கு மாணவ- மாணவிகள் சார்பாக நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது. முன்னாள் மாணவ-மாணவிகள் தாங்கள் பயின்ற வகுப்பறையை சுத்தம் செய்து வண்ணம் தீட்டி பூக்களால் அலங்கரித்தனர். முன்னாள் மாணவ- மாணவிகளின் குழந்தைகள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர். மேலும் விழாவிற்கு வருகை தந்த அனைவரும் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தனர்.

Tags:    

Similar News