எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்
- கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட் டத்தில் ஈடுபட்டனர்.
- ஊழியர்க ளுக்கு 10 சதவீதம் ஊதிய மாற்றம் வழங்க கோரிக்கை .
கிருஷ்ணகிரி,
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில், பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி நேற்று கிருஷ்ணகிரி மா வட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மண்டல அளவிலான உண்ணாவிரத போராட் டத்தில் ஈடுபட்டனர். கிருஷ் ணகிரி மாவட்டத் தலைவர் மணி தலைமை தாங்கினார். தர்மபுரி மாவட்டத் தலைவர் ராஜ்குமார் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் சேரலாதன் தொடக்க உரை யாற்றினார்.
மாவட்ட செயலாளர்கள் சுமதி, சரவணன், மணி, பைரோஸ்கான், குப்புசாமி, விஜயகுமார் ஆகியோர் கோரிக்கைவுரை ஆற்றினா ர்கள். அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் தமிழ் செல்வி நிறைவுரை ஆற்றி னார். மாவட்ட பொருளாளர் சிவசண்முகம் நன்றி கூறினார். உண்ணாவிரத போராட் டத்தில், அரசு ஆரம்ப சுகா தார நிலையங்க ளில் பணிபுரியும் ஊழியர்க ளுக்கு 10 சதவீதம் ஊதிய மாற்றம் வழங்கிட வேண்டும்.
தமிழகத்தில் 186 எச்.ஐ.வி. ஆலோசனை மற்றும் பரிசோ தனை மையங்களை மூட மத்திய அரசு அனுப்பி உள்ள சுற்றறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தியும் பேசப்பட்டன.