உள்ளூர் செய்திகள்

தூய்மை பணியில் ஈடுப்பட்டுள்ள ஊழியர்கள்.

கந்தூரி விழாவை முன்னிட்டு ஜாம்புவானோடையில் தூய்மை பணிகள் தீவிரம்

Published On 2022-12-02 09:52 GMT   |   Update On 2022-12-02 09:52 GMT
  • ஜாம்புவானோடை தர்காவின் 721-ம் ஆண்டு பெரிய கந்திரி விழா நடைபெறுகிறது.
  • தேங்கி கிடக்கும் குப்பைகள் மற்றும் சாக்கடை போன்ற அனைத்தும் துப்புர பணிகளும் நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியத்துக்குள் பட்ட ஜாம் புவானோடை தர்கா 721 ம் ஆண்டு பெரிய கந்திரி விழா நடை பெறுவதை முன்னிட்டு தர்கா பகுதியில் துப்புரப் பணிகள் மருந்து அடித்தல் மற்றும் அனைத்துசாலை ஓரங்களில் தேங்கி கிடக்கும் குப்பைகள் மற்றும் சாக்கடை போன்ற அனைத்து துப்புர பணிகளும் நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவர் லதா பாலமுருகன் தலைமையில் சாலை ஓரங்களில் தேங்கி கிடக்கும் குப்பைகள் மற்றும் சாக்கடை போன்ற அனைத்து துப்புர பணிகளும் நடைபெற்றது.

கந்திரி விழாவை முன்னிட்டு வருகிற 4-ந் தேதி சந்தனக்கூடு விழா மற்றும் 8-ந் தேதி அன்று புனித கொடி இறக்கும் விழா ஜாம் புவா னோடை தர்காவில் நடைபெறுவதை ஒட்டி அனைவருக்கும் தப்ரூக் (அன்னதானம்) வழங்கப்படும் என பாரம்பரிய தர்கா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாகிப் கூறினார்.

Tags:    

Similar News