உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2023-03-18 09:52 GMT   |   Update On 2023-03-18 09:52 GMT
  • எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு போட்ட தி.மு.க அரசை கண்டித்து நடைபெற்றது
  • மாவட்ட செயலாளர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி ஏ.டி.சி திடலில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப் பாடி பழனிசாமி மீது வழக்கு போட்ட தி.மு.க அரசை கண்டித்து அ.தி.மு.க மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர். அர்ச்சுணன் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் சண்முகம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் கோபா லகிருஷ்ணன், உஷா, பாசறை மாவட்ட செயலாளரும், நகரமன்ற உறுப்பினருமான அக்கீம்பா பு, குன்னூர் நகர செயலாளர் சரவணகுமார், ஒன்றிய செயலாளரகள் கடநாடுகுமார், தப்பகம்பை கிருஷ்ணன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் குருமூர்த்தி, ஓ.சி.எஸ் தலைவர் ஜெயராமன், கிளை செயலாளரும், அமைப்புசாரா ஓட்டுநர் அணி நகர செயலாளருமான நொண்டிமேடு கார்த்திக், இளைஞர் அணி பிரபுதுர்கா, நகர துணைச் செயலாளர் சித்ரா உமேஷ் ராஜேஸ்வரி, ரமேஷ் புவனா மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள், நகர ஒன்றிய பேரூராட்சி செயலாளர்கள், கிளைக் செயலாளர்கள், மகளிர் அணியினர், கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மலை மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற சிரியூர் மாரியம்மன் கோவில் ஆண்டு திருவிழாவில் வியாபாரம் செய்ய வந்த பழங்குடி நரிக்குறவர் இன மக்களை வனத்துறையினர் தாக்கியதால் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களை அ.தி.மு.க மாவட்ட செயலாளரும், மத்திய கூட்டுறவு வங்கி தலைலருமான கப்பச்சி வினோத் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அருகில் மாணவர் விசாந்த் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News