உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது எடுத்தபடம். 

பிறந்த நாளையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு - தச்சை கணேசராஜா தலைமையில் மரியாதை

Published On 2023-01-17 09:14 GMT   |   Update On 2023-01-17 09:14 GMT
  • அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா இன்று கொண்டா டப்பட்டது.
  • நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கொக்கிரகுளத்தில் உள்ள அவரது சிலைக்கு மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நெல்லை:

அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா இன்று கொண்டா டப்பட்டது.

இதையொட்டி நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கொக்கிரகுளத்தில் உள்ள அவரது சிலைக்கு மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன், டவுன் கூட்டுறவு வங்கி தலைவர் பால்கண்ணன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கல்லூர் வேலாயுதம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரியபெருமாள், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு,முன்னாள் மேயர் ஜெகநாதன் என்ற கணேசன், அமைப்பு சாரா ஓட்டுனரணி சிவந்தி மகாராஜேந்திரன், பகுதி செயலாளர்கள் சிந்துமுருகன், காந்தி வெங்கடாச்சலம், திருத்து சின்னதுரை, ெஜனி மற்றும் வக்கீல் அன்புஅங்கப்பன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குட்டி பாண்டி யன், மருதூர் ராம சுப்பிரமணியன், வட்டசெயலாளர்கள் பாறையடிமணி, பழைய பேட்டை கணேஷ், பகுதி துணை செயலாளர் மாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மாவட்ட பிரதிநிதி ஈஸ்வரி கிருஷ்ணன் ஏற்பாட்டில் டவுன் காட்சி மண்டபத்தில் அன்னதானம் நடைபெற்றது. அதனை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தொடங்கி வைத்தார்.

Tags:    

Similar News