உள்ளூர் செய்திகள்

முதல் மனைவி புகாரில் நடவடிக்கை: 2-வது திருமணம் செய்த வாலிபர் கைது

Published On 2022-10-07 09:32 GMT   |   Update On 2022-10-07 09:32 GMT
  • கணவரை பிரிந்து தனது தாய் வீட்டில் பிரேம்கா வசித்து வருகிறார்.
  • சரவணன் கைது செய்யப்பட்டார். மற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள கொத்துக்காரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரேம்கா (வயது 31). இவருக்கும் சரவணன் என்பவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனது தாய் வீட்டில் பிரேம்கா வசித்து வருகிறார்.

இந்த சூழலில் சரவணன் தனது உறவினர் ஒருவரது மகளை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது பற்றி அறிந்த பிரேம்கா அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

அதில் சரவணன், அவரது பெற்றோர் வேடியப்பன், பத்மா,உள்பட 9 பேர் மீது புகார் கொடுத்துள்ளார். இதில் சரவணன் கைது செய்யப்பட்டார். மற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News