உள்ளூர் செய்திகள்

நேனோ யூரியா விவசாயிகளுக்கு செயல் விளக்கம்

Published On 2022-12-22 09:25 GMT   |   Update On 2022-12-22 09:25 GMT
  • நேனோ யூரியா என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
  • மேலும் இந்த கூட்டத்தில் உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் காயத்ரி, வனிதா மற்றும் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தருமபுரி,

தருமபுரி வட்டாரத்திற்கு உட்பட்ட அதகபாடி மற்றும் பழைய தருமபுரி கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தின் மூலம் நேனோ யூரியா என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காண்பிக்க ப்பட்டது.

இந்த செயல் விளக்கம் குறித்து கோரமண்டல் பிரை வேட் லிமிடெட் கம்பெனியை சேர்ந்த ஸ்ரீகாந்த் நேனோ யூரியாவை பயிர்களுக்கு எந்த விகிதத்தில் தெளிக்க வேண்டும் என்பது குறித்தும் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்.

மேலும் இந்த கூட்டத்தில் உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் காயத்ரி, வனிதா மற்றும் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News