உள்ளூர் செய்திகள்

ஓசூர் அருகே விபத்து டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் பலி

Published On 2022-11-10 14:51 IST   |   Update On 2022-11-10 14:51:00 IST
  • இருவரும் மோட்டார் சைக்கிளில் முகல்பள்ளி சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
  • அவ்வழியாக வந்த ஒரு டிராக்டர் மீது மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பிரேம்குமார் உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி

ஓசூர் அருகேயுள்ள குன்னகானபள்ளி பகுதியை சேர்ந்த ராஜப்பா என்பவரது மகன் பிரேம்குமார் (வயது 15).அதே பகுதியை சேர்ந்த முனிரெட்டி என்பவரது மகன் ராகவேந்திரா (18).

இருவரும் மோட்டார் சைக்கிளில் முகல்பள்ளி சாலையில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது அவ்வழியாக வந்த ஒரு டிராக்டர் மீது மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பிரேம்குமார் உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்த ராகவேந்திரா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து பாகலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News