ரூ.9 லட்சம் மதிப்பிலான 34 செல்போன்களை அபேஸ்
- சேலத்தில் உள்ள ஒரு தனியார் கூரியர் நிறுவனம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.
- தனிப்படை போலீசார் மாமாங்கத்தில் இருந்த வெங்கேடேச னை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேலம்:
ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்படும் செல்போன் உள்பட விலை உயர்ந்த பொருட்கள் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கூரியர் நிறுவனம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.
34 செல்போன்கள்
அந்த நிறுவனத்தில் மதுரை பில்லாபுரத்ைத சேர்ந்த வெங்கடேஷ் (வயது 31) என்பவர் பணியாற்றினார். சேலம் மாமாங்கத்தில் வீடு எடுத்து தங்கியிருந்த அவர் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டிய செல்போன்களை முறையாக கொடுக்காமல் ரூ. 9 லட்சம் மதிப்பிலான 34 செல்போன்களை அவர் முறைகோடு செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து கூரியர் நிறுவன மேலாளரான மல்லூரை சேர்ந்த திருநாவுக்கரசு (46) கடந்த மாதம் சூரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேசனை தேடினர். மேலும் உதவி கமிஷனர் நாகராஜ், இன்ஸ்பெக்டர் கந்தவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் மாமாங்கத்தில் இருந்த வெங்கேடேச னை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்யும் வகையில் அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.