உள்ளூர் செய்திகள்

மாணவியை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. பாராட்டிய காட்சி. அருகில் துணை மேயர் ராஜூ.

பிளஸ்-2 தேர்வில் முதல் 3 இடம் பிடித்த கல்லணை பள்ளி மாணவிகளுக்கு அப்துல் வகாப் எம்.எல்.ஏ. வாழ்த்து

Published On 2023-05-17 09:06 GMT   |   Update On 2023-05-17 09:06 GMT
  • நர்மதா,சந்தோஷிணி, உமா ஆகியோர் அதிக மதிப்பெண்கள் பெற்றனர்.
  • 3 மாணவிகளுக்கும், அப்துல் வகாப் எம்.எல்.ஏ. உதவித்தொகை வழங்கினார்.

நெல்லை:

நெல்லை டவுனில் உள்ள கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், பாளை தொகுதி எம்.எல்.ஏ.வுமான அப்துல் வஹாப் கலந்து கொண்டு பிளஸ்-2 வகுப்பில் பள்ளி அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் 3 மாணவிகளான நர்மதா -588, சந்தோஷிணி- 586, உமா- 580 ஆகியோரை பாராட்டி பொன்னாடை போர்த்தினார். மேலும் 3 மாணவிகளுக்கும் உதவித்தொகை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் கே.ஆர். ராஜூ, கவுன்சிலர் அனார்கலி, பள்ளி உதவி தலைமை ஆசிரியர் குமார் ஜெயராஜ், முனைவர்கள் முத்துராஜ், காந்திமதி மற்றும் நிர்வாகிகள் சரவணன், சுந்தர், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News