உள்ளூர் செய்திகள்

திருவெண்ணைய்நல்லூர் அருகே புகையிலை பாக்கெட் கடத்திய வாலிபர் கைது

Published On 2023-03-12 08:38 GMT   |   Update On 2023-03-12 08:38 GMT
  • திருவெண்ணைய்நல்லூர் அருகே புகையிலை பாக்கெட் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர்.

விழுப்புரம்:

திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் தனிப்படை போலீஸ் மோகன்தாஸ், சிறுமதுரை பஸ் நிறுத்தம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவரை பிடித்து விசாத்தார். அவர் 725 தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருப்பதும் இவர் வீரணாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மகாதேவன் மகன் அசோக் (வயது 28) என்பது தெரிய வந்தது. புகையிலை பாக்கெட்டுக்களை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர்.

Tags:    

Similar News