உள்ளூர் செய்திகள்

கோவை அருகே கைக்குழந்தையுடன் கள்ளக்காதலனுடன் ஓடிய இளம்பெண்

Published On 2022-11-07 14:42 IST   |   Update On 2022-11-07 14:42:00 IST
  • இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
  • கணவரை தவிக்க விட்டு கைக்குழந்தையுடன் கள்ளக்காதலனுடன் ஓடிய இளம்பெண்ணை ேதடி வருகிறார்கள்.

கோவை,

கோவை காளப்பட்டியை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 2 வயதில் ஒரு பெண் குழந்தையும், 3 மாத கைக்குழந்தையும் உள்ளது.

இந்தநிலையில் இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த வாலிபருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது. கணவர் வேலைக்கு செல்லும் நேரத்தில் இளம்பெண் கள்ளக்காதலனை வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.

இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக இளம்பெண்ணின் கணவரு க்கு தெரிய வந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

சம்பவத்தன்று இளம்பெண்ணின் கணவர் வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது வீட்டில் இருந்த இளம்பெண் 3 மாத கைக்குழந்தை மற்றும் 2 மாதம் பெண் குழந்தையும் தனது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். வீட்டிற்கு திரும்பிய கணவர் மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இது குறித்து கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவரை தவிக்க விட்டு கைக்குழந்தையுடன் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை ேதடி வருகிறார்கள். 

Tags:    

Similar News