உள்ளூர் செய்திகள்

சின்னசேலம் அருகே கைக்குழந்தையுடன் இளம்பெண் மாயம்

Published On 2023-05-23 12:59 IST   |   Update On 2023-05-23 12:59:00 IST
  • மனோன்மணிக்கு கடந்த வருடத்தில் திருமணம் ஆகி 10 மாத கைக்குழந்தை உளளது.
  • மனோன்மணி எங்கேயும் கிடைக்காததால் சின்னசேலம் போலீசாரிடம் புகார் அளித்தார்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள அமையாபுரம் கிராமத்தை சேர்ந்த மனோன்மணி. இவருடைய மனைவி ஐஸ்வர்யா (வயது 21). இவர்களுக்கு கடந்த வருடத்தில் திருமணம் ஆகி 10 மாத கைக்குழந்தை உளளது. இந்நிலையில் பெங்களூரில் வசிக்கும் தனது தாய் வீட்டிற்கு செல்வதாகக் கூறி கடந்த 17-ந்தேதி கைக்குழந்தையுடன் ஐஸ்வர்யா சென்றார்.

அவரது செல்போனுக்கு மனோன்மணி தொடர்பு கொண்ட போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பெங்களூரில் வசிக்கும் ஐஸ்வர்யாவின் தாயை தொடர்பு கொண்டு கேட்டபோது பொழுது ஐஸ்வர்யா வரவில்லை என தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மனோன்மணி பல இடங்களில் தேடிப் பார்த்து எங்கேயும் கிடைக்காததால் சின்னசேலம் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மாயமான ஐஸ்வர்யா மற்றும் அவரது குழந்தையை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News