உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே கோவிலுக்கு சென்ற இளம் பெண் திடீர் மாயம்

Published On 2022-12-31 08:51 GMT   |   Update On 2022-12-31 08:51 GMT
  • இளம்பெண் சம்பவத்தன்று கோவிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார்.
  • பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மாயமான இளம்பெண்ணை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

கடலூர்:

கடலூர் அருகே நடுவீரப்பட்டு சி. என். பாளையம் சேர்ந்த 20 வயது இளம்பெண் சம்பவத்தன்று கோவிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் வெளியில் சென்ற இளம்பெண் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மாயமான இளம்பெண்ணை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மாயமான இளம் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News