உள்ளூர் செய்திகள்
ஓசூர் அருகே திருமணம் நிச்சயமான இளம்பெண் மாயம்
- பிரியங்கா குமாரிக்கு திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டது.
- வீட்டை விட்டு சென்ற பிரியங்கா குமாரி அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள பேடரபள்ளி பாரதியார் நகர் பகுதியை சேர்ந்தவர் அருள்குப்தா. இவரது மகள் பிரியங்கா குமாரி (வயது 21). இவருக்கு திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டது.
இதையடுத்து தனது தோழிகளுக்கு திருமண பார்ட்டி வைப்பதாக கூறி வீட்டை விட்டு சென்ற பிரியங்கா குமாரி அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது அண்ணன் அபிசேக் குமார் கொடுத்த புகாரின்பேரில் ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
இதேபோல அஞ்செட்டி அருகேயுள்ள உரிகம் கிராமத்தை சேர்ந்த வேங்கடசாமி (32) என்பவர் கடந்த 18-ந்தேதி கோவிலுக்கு செல்வதாக கூறி புறப்பட்டு சென்றவர் அதன்பிறகு வீடு திரும்ப வில்லை. இது குறித்து அவரது தாய் கொடுத்த புகாரின்பேரில் அஞ்செட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.