உள்ளூர் செய்திகள்
கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் சாவு
- அதேபகுதியில் நடந்து செல்லும் போது அங்குள்ள ஒரு கிணற்றில் தவறி விழுந்தார்.
- அதில் அவர் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த சாபர்தி பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது36).
இவர் நேற்று முன்தினம் அதேபகுதியில் நடந்து செல்லும் போது அங்குள்ள ஒரு கிணற்றில் தவறி விழுந்தார்.
அதில் அவர் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவேரிப்பட்டணம் போலீசார் அங்கு விரைந்து சென்று குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.