உள்ளூர் செய்திகள்

கடலூர் முதுநகரில் 15 வயது சிறுமியை கடத்தி சென்ற வாலிபர்போலீசார் வலை வீச்சு

Published On 2023-08-29 09:24 GMT   |   Update On 2023-08-29 09:24 GMT
  • அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் சிறுமியை தேடினர். அவர் எங்கும் கிடைக்கவில்லை.
  • கடலூர் முதுநகர் போலீசில் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

கடலூர்:

கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி வீட்டில் இருந்து வந்தார். திடீரென்று சிறுமியை காணவில்லை. அதிர்ச்சிடைந்த அவரது உறவினர்கள் சிறுமியை தேடினர். அவர் எங்கும் கிடைக்கவில்லை. அக்கம் பக்கத்தில் விசாரித்த போது, அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் பள்ளி மாணவியை கடத்தி சென்றதாக தெரியவந்தது. இது குறித்து கடலூர் முதுநகர் போலீசில் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News