உள்ளூர் செய்திகள்
- தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார்.
- அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது.
ஓசூர், ஜூன்.24-
கர்நாடக மாநிலம் பெங்களூர் மத்திகரை பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகன் ஜெய் தீபக்குமார்( வயது 19).
இவர் ஓசூரில் இருந்து பேரண்ட பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் பாரஸ்ட் ஏரியாவில் ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது இவர் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஜெய் தீபக்குமார் சம்பவ இடத்தில் இறந்தார். இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.