உள்ளூர் செய்திகள்

ஒற்றை யானை தாக்கி விவசாயி காயம்

Published On 2023-05-16 09:29 GMT   |   Update On 2023-05-16 09:29 GMT
  • அந்த வழியாக வந்த ஒற்றை யானை தாக்கி தூக்கி வீசியது.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காமன்தொட்டியைச் சேர்ந்தவர் கண்ணையன் (வயது67). விவசாயியான இவர் நேற்று வீட்டின் அருகே உள்ள வனபகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒற்றை யானை தாக்கி தூக்கி வீசியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News