உள்ளூர் செய்திகள்
ஒற்றை யானை தாக்கி விவசாயி படுகாயம்
- அம்மாசி என்ற விவசாயியை எதிர்பாராதவிதமாக யானை தாக்கியது.
- படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே சோக்காடி பகுதியில் இன்றுகாலை ஒற்றை காட்டுயானை சுற்றித்திரிந்தது.
அந்த யானை அங்குள்ள விவசாய விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்துள்ளது. அப்போது அம்மாசி என்ற விவசாயியை எதிர்பாராதவிதமாக யானை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்தனர். அப்போது விவசாயியை தாக்கிய ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.