உள்ளூர் செய்திகள்

வாலிபருக்கு அரிவாள் வெட்டு

Published On 2022-07-20 11:04 GMT   |   Update On 2022-07-20 11:04 GMT
  • மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தி ரத்தினகுமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடினர்.
  • விசாரணையில் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது.

நீடாமங்கலம்:

திருபுவனம் மேல சாலை மடவிளாகம் பகுதியை சேர்ந்தவர் ரத்தினகுமார் (வயது 30). இவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த சக்தி பிரகாஷ் (19), பிரிதிவிராஜன்(20) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தி ரத்தினகுமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடினர்.

இந்த தாக்குதலில் படுகா யமடைந்த ரத்தினகுமார் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தி னர். முதல்கட்ட விசார ணையில் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக உள்ள பிரகாஷ், பிரிதிவிராஜன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News