கொள்ளையர்கள் புகுந்த வீடு.
பழனியில் வீட்டை உடைத்த கொள்ளையர் ஏமாற்றத்தால் அதிர்ச்சி
- வீட்டின் பூட்டை உடைத்து பீரோவை திறந்து பார்த்தபோது அதில் நகை-பணம் எதுவும் கிடைக்காததால் கொள்ளையர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
- புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.
பழனி:
பழனி திருநகரை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி கனகா. செவிலியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர்கள் 2 பேரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டைபூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டனர். நேற்று நள்ளிரவு இவர்களது வீட்டின் பூட்டைஉடைத்து கொள்ளையர்கள் சிலர் உள்ளே புகுந்தனர். பீரோவை திறந்து பார்த்தபோது அதில் நகை-பணம் எதுவும் கிடைக்கவில்லை.
இதனால் ஏமாற்றம் அடைந்த அவர்கள் வீட்டிற்குள் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளில் பெட்ரோலை ஒரு கேனில் பிடித்து ெசன்றனர். இன்று வீட்டிற்கு திரும்பிய சந்திரசேகரன் மர்மநபர்கள் பூட்டைஉடைத்து உள்ளே நுழைந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சிசிடிவி காமிராபதிவுகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். தனது வீடடில் நகை-பணம் எதுவும் வைத்திருக்கவில்லை என்றும், பூட்டியிருக்கும் வீடுகளை குறிவைத்து கொள்ளையர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் அவர் போலீசில் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.