உள்ளூர் செய்திகள்

சேலம் கந்தம்பட்டி மேம்பாலத்தில் வாகனம் மோதி பெயிண்ட் வியாபாரி பலி

Published On 2023-04-12 15:26 IST   |   Update On 2023-04-12 15:26:00 IST
  • தசரதன் (வயது 48). பெயிண்ட் வியாபாரி. இவர் 3 ரோட்டில் பெயிண்ட் மொத்தமாக வாங்கி கடைகளுக்கு விநியோகம் செய்து வந்தார்.
  • தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கந்தம்பட்டி மேம்பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

சேலம்:

சேலம் 3 ரோடு பகுதியை சேர்ந்தவர் தசரதன் (வயது 48). பெயிண்ட் வியாபாரி. இவர் 3 ரோட்டில் பெயிண்ட் மொத்தமாக வாங்கி கடைகளுக்கு விநியோகம் செய்து வந்தார்.

இவர் நேற்று இரவு 10 மணி அளவில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கந்தம்பட்டி மேம்பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு அடையாளம் தெரியாத வாகனம் தசரதன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தசரதன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பலியான தசரதன் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது மனைவி ரஞ்சிதம் கொடுத்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News