உள்ளூர் செய்திகள்

தகரக் கொட்டையில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி.

சோழங்கநத்தம் ஊராட்சி பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும்

Published On 2022-12-01 14:56 IST   |   Update On 2022-12-01 14:56:00 IST
  • மாணவ மாணவிகளுக்கு இடிக்கப்பட்ட கட்டிடத்தின் அருகே உள்ள தகரக் கொட்டாகையில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றனர்.
  • தூசி, விஷப் பூச்சிகளைத் தடுக்கும் வண்ணம் தகரக் கொட்டகை சுற்றிலும் தார் படுதாய் சுற்றப்பட்டு அவல நிலையாக பள்ளி காட்சியளிக்கிறது.

கபிஸ்தலம்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு, ஆதனூர், ஒலைப்பாடி ஒன்றிய கவுன்சிலர் கே. முருகன் ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் சோழங்கநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறை கட்டிடம் பழுது ஏற்பட்டதால் கட்டிடம் இடிக்கப்பட்டது.

இந்நிலையில் மாணவ மாணவிகளுக்கு இடிக்க ப்பட்ட கட்டிடத்தின் அருகே உள்ள தகரக் கொட்டா கையில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மழை க்காலம் தொடங்குவதாலும் வெயில் மற்றும் தூசி, விஷப் பூச்சிகளைத் தடுக்கும் வண்ணம் தகரக் கொட்டகை சுற்றிலும் தார் படுதாய் சுற்றப்பட்டு அவல நிலையாக பள்ளி காட்சியளிக்கிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் உடன் தலையிட்டு சோழங்கநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டித் தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News