உள்ளூர் செய்திகள்

உடன்குடியில் இந்து மகா சபா நிர்வாகிகள் கூட்டம்

Published On 2023-10-03 09:09 GMT   |   Update On 2023-10-03 09:09 GMT
  • அகில பாரத இந்து மகா சபா செயற்குழு நிர்வாகிகள் கூட்டம் உடன்குடி வைத்தியலிங்கபுரம் இசக்கிஅம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது.
  • கூட்டத்தில் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் வழிபடும் பக்தர்கள் தரை வழியாக சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

உடன்குடி:

அகில பாரத இந்து மகா சபா செயற்குழு நிர்வாகிகள் கூட்டம் உடன்குடி வைத்தியலிங்கபுரம் இசக்கிஅம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது. நகரத் தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர்கள் ராஜேந்திரன், முத்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல தலைவர் சுந்தரவேலு, செயலாளர் அய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் வழிபடும் பக்தர்கள் தரை வழியாக சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும், கம்பி வழியாக ஏறி இறங்குவதை அப்புறப்படுத்த வேண்டும், கோவில் அருகில் பக்தர்கள் மேள வாத்தியங்கருடன் செல்ல அனுமதிக்க வேண்டும், கூட்டத்தை சமாளிக்க போலீஸ் நிலையத்தில் உள்ள பழைய சுற்றுச்சுவரை அப்புறப்படுத்த வேண்டும் என்றும், பணியாளர்கள் மரியாதையாக பேச வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. உடன்குடி ஒன்றிய தலைவர் வினோத், ஒன்றிய செயலாளர் முத்துலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். செயற்குழு உறுப்பினர் அந்தோணி நன்றி கூறினார்.

Tags:    

Similar News