உள்ளூர் செய்திகள்

கள்ளக்காதலன் சரவணன்

பண்ருட்டி அருகே கள்ளக்காதலியை சரமாரியாகதாக்கிய கூலி தொழிலாளி கைது

Published On 2023-07-30 08:42 GMT   |   Update On 2023-07-30 08:42 GMT
  • முந்திரிக்கொட்டை உடைக்கும் தொழிலாளி சரவணன்
  • கணவன் -மனைவிக்கும் அடிக்கடி தகராறு

கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த வீரசிங்கன் குப்பம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளிக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன. தொழிலாளி அடிக்கடி குடித்து விட்டு வருவதால் அவருக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அப் பெண் பக்கத்து வீட்டை சேர்ந்த முந்திரிக்கொட்டை உடைக்கும் தொழிலாளி சரவணன் (47) என்பவருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கணவருடன் வாழாமல் தாய் வீட்டில் இருந்து வந்த அப் பெண் வேறு ஒரு வாலிபருடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.

இந்த விவகாரம் கள்ளக்காதலன் சரவணனுக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த சரவணன், கள்ளக்காதலியை கொள்ளுகாரன் குட்டைக்கு வரவழைத்துள்ளார்.

கொள்ளுகாரன்குட்டை பகுதியில் உள்ள முந்திரி தோப்புக்கு அழைத்துச் சென்று யாருடன் மணி கணக்கில் போனில் பேசுகிறாய் என்று கேட்டுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு அப் பெண்ணை சரவணன் தன் கையில் வைத்திருந்த சுத்தியால் காலிலும், தலையிலும் அடித்துள்ளார்.

இதில் காயம் அடைந்தஅப் பெண் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன், முத்தாண்டி குப்பம் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலன் சரவணனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News