உள்ளூர் செய்திகள்

பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

பெரியக்கோட்டை ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவிப்பு

Published On 2023-10-07 14:51 IST   |   Update On 2023-10-07 14:51:00 IST
  • இங்கு பிரசவமாகும் குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவிப்பதாக அறிவித்திருந்தார்.
  • 2-வது பிரசவத்துக்காக பெரியக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

மதுக்கூர்:

மதுக்கூர் அருகே உள்ள பெரியக்கோ ட்டையில் இயங்கிவரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பிரசவம் நடை பெறாததாலும் பொதுமக்க ளுக்கு இருக்கும் அச்சத்தை போக்கும் விதமா கவும் அங்கே மருத்துவராக பணிபு ரியும் மணவழகன் இங்கு பிரசவமாகும் குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவி ப்பதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு சொக்கனாவூர் மேலதெருவை சேர்ந்த தர்மராஜ் மனைவி சுமித்ரா (வயது 23) இரண்டாவது பிரசவத்துக்காக இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு இரவு நேரத்திலும் பெண் மருத்துவர் பூர்வி சிகிச்சை அளித்தார்.

அவருக்கு உறுதுணையாக செவிலியர்கள் வினோதா, கலா, சூசைஅந்தோனி, ஆயா செல்வி இருந்தனர்.

சுகப்பிரசவம் செய்ததில் சுமித்ராவுக்கு பென் குழந்தை பிறந்தது.

இதையடுத்து டாக்டர் மணவழகன் ஏற்கனவே கூறியது போல பிறந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரத்தை சொக்கனாவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் இளங்கோ மூலமாக அணிவித்தார்.

Tags:    

Similar News