உள்ளூர் செய்திகள்

திண்டிவனத்தில் பரபரப்பு முட்டை வியாபாரி வீட்டில் வெடித்த கியாஸ் சிலிண்டர்

Published On 2022-10-05 08:43 GMT   |   Update On 2022-10-05 08:43 GMT
  • குடும்பத்தினர் ஆயுத பூஜையை முன்னிட்டு பூஜை பொருட்களை வியாபாரம் செய்வதற்காக சென்றுள்ளனர்.
  • அந்த நேரத்தில் சண்முகசுந்தரம் வீட்டின் வெளியே அமர்ந்திருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

திண்டிவனம் ரொட்டிக்கார தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். அவரது மகன் சந்தோஷ். இவர் பெருமாள் கோவில் எதிரில் முட்டைக்கடை வைத்துள்ளார்.இவரது குடும்பத்தினர் ஆயுத பூஜையை முன்னிட்டு பூஜை பொருட்களை வியாபாரம் செய்வதற்காக சென்றுள்ளனர். அப்போது வீட்டில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு, மின் வயர்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது.

இதனால் சமையலறையில் இருந்த காஸ் சிலிண்டரும் எரிந்து பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. அந்த நேரத்தில் சண்முகசுந்தரம் வீட்டின் வெளியே அமர்ந்திருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டிவனம் தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில் வீட்டிலிருந்த சுமார் 4 லட்சம் மதிப்பிலான மின்சாதன பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. மக்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ள பகுதியில் நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News