உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே குடிபோதையில் வீட்டிற்கு தீ வைத்த தொழிலாளி

Published On 2022-11-19 13:23 IST   |   Update On 2022-11-19 13:23:00 IST
  • மது குடிக்கும் பழக்கம் உடைய நாராயணன் சம்பவத்தன்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்தார்.
  • நாராயணன் மீது ரிஷிவந்தி யம் போலீசாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே மேலப்பழங்கூரை சேர்ந்த வர் நாராயணன். இவரது மனைவி அய்யம்மாள் (40). இருவரும் கரும்பு வெட்டும் தொழிலாளிகள். மது குடிக்கும் பழக்கம் உடைய நாராயணன் சம்பவத்தன்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் அய்ய ம்மாள் மற்றும் பிள்ளை களை ஆபாச வார்த்தை களால் திட்டியதோடு கூரை வீட்டுக்கும் தீ வைத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அய்யம்மாள் அக்கம் பக்கத்தினர் உதவியோடு தீயை அணைத்தார். பின்னர் இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் நாராயணன் மீது ரிஷிவந்தி யம் போலீசாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News