உள்ளூர் செய்திகள்

கோவையில் புதிய மோட்டார்சைக்கிளை திருடிச் சென்ற போதை நபர்

Published On 2023-03-28 09:35 GMT   |   Update On 2023-03-28 09:35 GMT
  • இருசக்கர வாகனத்தை நோட்டமிட்டு ஒருவரும் இல்லாத சமயத்தில் அதை எடுத்துக்கொண்டு சிட்டாய் பறந்து விட்டார்.
  • வாகனத்தை திருடும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூலூர்,

சூலூர் அருகே அரசூர் ஊராட்சி செயல்பட்டு வருகிறது. அரசூர் ஊராட்சி அலுவலகத்திற்கு முன்பாக அங்கு பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்தி செல்வது வழக்கம்.

நேற்று ஊராட்சி அலுவலகத்திற்கு வந்த போதை நபர் அங்குள்ளவர்களிடம் தனக்கு குடிக்க பணம் வேண்டும் 50 ரூபாய் கொடுங்கள் என கேட்டுள்ளார். ஏற்கனவே போதையில் இருந்த அந்த போதை நபரை அலுவலகத்தில் இருந்து வெளியே செல்லுமாறு அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர்.

அலுவலகத்தை விட்டு வெளியே வந்த போதை நபர், தான் வந்த பழைய இருசக்கர வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு அங்கிருந்த புதிய ஒரு இருசக்கர வாகனத்தை நோட்டமிட்டு ஒருவரும் இல்லாத சமயத்தில் அதை எடுத்துக்கொண்டு சிட்டாய் பறந்து விட்டார்.

அந்த இருசக்கர வாகனமானது அரசூர் ஊராட்சி அலுவலகத்தில் திட்ட பிரிவில் பணியாற்றும் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமானது.

வெளியே வந்து பார்த்தபோது தனது இருசக்கர வாகனம் திருடப்பட்டது தெரியவந்து ராமச்சந்திரன் அதிர்ச்சி அடைந்தார். இது சம்பந்தமாக சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். தற்போது போதை நபர் இருசக்கர வாகனத்தை திருடும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News