உள்ளூர் செய்திகள்

எரியாத உயர்கோபுர மின்விளக்கை படத்தில் காணலாம்.


பழுதான உயர் மின் கோபுரம் விளக்கை சிரமைக்க வேண்டும்

Published On 2023-09-04 09:09 GMT   |   Update On 2023-09-04 09:09 GMT
  • தருமபுரி-திருப்பத்தூர் சாலையில் உள்ள பெரியார் சிலை அருகே உயர் மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.
  • இரவு நேரங்களில் செல்லும் வாகனங்களால் சாலையை கடக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தருமபுரி,

தருமபுரி நகரப் பகுதியான தருமபுரி-திருப்பத்தூர் சாலையில் உள்ள பெரியார் சிலை அருகே உயர் மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த உயர் மின் கோபுர விளக்கு கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக செயல்படாத நிலையில் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் செல்லும் வாகனங்களால் சாலையை கடக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் இருள் சூழ்ந்து கிடப்பதால், ஆள் நடமாட்டம் இல்லாத போது பெண்களிடம் மர்ம நபர்கள் நகை பறிப்பு, வழிபறி சம்பவங்கள் ஈடுபட ஏதுவாக இருக்கும் என கருதி அப்பகுதியில் பெண்கள் இரவு நேரங்களில் நடமாட அஞ்சி வருகின்றனர்.

எனவே நகராட்சி நிர்வாகம் மின் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags:    

Similar News