உள்ளூர் செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே மினி பஸ் கண்ணாடியை உடைத்த 10 பேர் மீது வழக்கு

Published On 2023-09-02 07:42 GMT   |   Update On 2023-09-02 07:42 GMT
  • மின் பஸ் ஹாரன் அடித்தபடி வந்தது.
  • நிறுத்திய கும்பல் பஸ் கண்ணாடியை உடைத்தனர்.

கள்ளக்குறிச்சி:

உளுந்தூர்பேட்டை தாலுக்கா பூ.கிள்ளனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (வயது 19). இவர் தனது நண்பர்கள் 10 பேருடன் சாலையின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த மின் பஸ் ஹாரன் அடித்தபடி வந்தது. இதனால் பயந்து போன ஒரு சிலர் சாலையில் தடுமாறி விழுந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மினி பஸ் மீண்டும் வரும் வரை சாலையிலேயே காத்திருந்தனர். சிறிது நேரம் கழித்து மினி பஸ் அதே சாலையில் வந்தது. அதனை நிறுத்திய இந்த கும்பல் பஸ் கண்ணாடியை உடைத்தனர். மேலும், பஸ்சின் ஹாரனை அடித்து நொறுக்கினர். இது குறித்து மினி பஸ் டிரைவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சிவப்பிரகாசம், அவருடன் வந்த 10 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News