உள்ளூர் செய்திகள்

சேலம் 4 ரோடு பகுதியில் சாக்கடை கால்வாைய ஆக்கிரமித்த கட்டிடம்

Published On 2022-08-15 08:54 GMT   |   Update On 2022-08-15 08:54 GMT
  • சேலம் 4 ரோடு அருகே காமராஜர் காலனி உள்ளது. இந்த பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடியும் செயல்பட்டு வருகிறது. மேலும் ஏராளமான குடியிருப்புகளும் உள்ளன.
  • அங்குள்ள சாக்கடை கால்வாயை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதனால் சாக்கடை நீர் செல்ல வழியில்லாமல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

சேலம்:

சேலம் 4 ரோடு அருகே காமராஜர் காலனி உள்ளது. இந்த பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடியும் செயல்பட்டு வருகிறது.

மேலும் ஏராளமான குடியிருப்புகளும் உள்ளன. இந்த நிலையில் அங்குள்ள சாக்கடை கால்வாயை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதனால் சாக்கடை நீர் செல்ல வழியில்லாமல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

இதனால் அந்த பகுதியில் பலருக்கு டெங்கு உள்பட பல்வேறு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் சாக்கடை கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றி சாக்கடை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News