உள்ளூர் செய்திகள்

பிடிபட்ட சாரைப்பாம்பு.

விளாத்திகுளத்தில் வீட்டுக்குள் புகுந்த 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு

Published On 2022-08-19 14:34 IST   |   Update On 2022-08-19 14:34:00 IST
  • விளாத்திகுளம் சத்யாநகர் பகுதியை சேர்ந்த மாரிச்சாமியின் வீட்டிற்குள் 5 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு ஒன்று புகுந்தது.
  • ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்புத் துறையினர் பாம்பை பிடித்தனர்.

விளாத்திகுளம்:

விளாத்திகுளம் சத்யாநகர் பகுதியை சேர்ந்தவர் மாரிச்சாமி. இவரது வீட்டிற்குள் திடீரென 5 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதனை கண்ட வீட்டில் உள்ளவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர். இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த ராதாகிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் பாம்பை பிடிக்க முயன்றபோது பாம்பு வீட்டுக்குள் இருந்த பீரோவுக்கு அடியில் சென்று மறைந்தது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்புத் துறையினர் பாம்பை பிடித்தனர். பிடிபட்ட சாரைப்பாம்பை கொண்டு சென்று அடர்ந்த காட்டுப் பகுதியில் விட்டனர்.

Tags:    

Similar News