- விழா கடந்த 5-ந் தேதி தொடங்கி வருகிற 12-ந் தேதி வரை நடக்கிறது.
- வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, படையல் இட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த தேத்தாக்குடி தெற்கு, யாதவபுரத்தில் உள்ள வெங்கடாஜலபதிக்கு 70-வது ஆண்டு கம்பசேவை திருவிழா கடந்த 5-ந் தேதி தொடங்கியது.
இந்த விழா வருகிற 12-ந் தேதி வரை நடக்கிறது.
முன்னதாக தெத்தேரியிலிருந்து பக்தா்கள் புனித நீராடி, கம்ப விளக்கு ஏந்தி வந்து வெங்கடாஜலபதி சன்னதியில் வைத்து வழிபட்டனர்.
தொடர்ந்து வடை மாலை, வாழைத்தார், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு படையல் இட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடா்ந்து, அரிச்சந்திரா புராண நாடகம் நடந்தது.
விழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு கலை நிகழ்ச்சிகள், கிராமிய பல்சுவை நிகழ்ச்சி, வருகிற 9-ந் தேதி விளக்கு பூஜை மற்றும் இன்னிசை நிகழ்ச்சி, பரத நாட்டியம், ஆன்மீக சொற்பொழிவு, இன்னிசை பட்டிமன்றம் ஆகியவை நடைபெற உள்ளது.
ஏற்பாடுகளை விழா நிர்வாக குழுவினரும், தேத்தாக்குடி தெற்கு யாதவபுரம் கிராமமக்களும் செய்திருந்தனா்.