உள்ளூர் செய்திகள்

விருத்தாசலத்தில் லாரி ஏறி நசுக்கியதில் 6 வாகனங்கள் சேதம்

Published On 2022-06-13 09:55 GMT   |   Update On 2022-06-13 13:27 GMT
  • லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பின்புறம் சென்றதால் விபத்து
  • வாகனங்களின் உரிமையாளர்கள் யாரும் அருகில் இல்லாததால் அதிஷ்டவசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

கடலூர்:

விருத்தாசலம் காட்டுக்கூடலூர் சாலையில் உள்ள காய்கறி மார்க்கெட் எதிரே உள்ள அரிசி கடைக்கு சுமார் 50 டன் அரிசி லாரி ஏற்றி வந்தது. அப்போது லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பின்புறம் சென்றதால் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 இருசக்கர வாகனங்கள் மீது ஏறி வாகனங்கள் நொறுங்கியது.

அப்போது வாகனங்களின் உரிமையாளர்கள் யாரும் அருகில் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News