உள்ளூர் செய்திகள்

காப்பகத்தில் இருந்து 6 பெண்கள் தப்பி ஓட்டம்

Published On 2023-04-06 15:26 IST   |   Update On 2023-04-06 15:26:00 IST
  • காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் குழந்தைகள் மற்றும் பெண்கள் காப்பகம் உள்ளது.
  • இன்று அதிகாலை காப்பகத்தில் இருந்த 6 பெண்கள் திடீரென மாயமானார்கள்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் குழந்தைகள் மற்றும் பெண்கள் காப்பகம் உள்ளது. இங்கு ஆதரவற்ற பெண்கள் மற்றும் பல்வேறு பிரச்சினைகளில் போலீசாரால் மீட்கப்படும் சிறுமிகள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். சுமார் 20-க்கும் மேற்பட்ட சிறுமிகள், பெண்கள் தங்கி இருந்தனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை காப்பகத்தில் இருந்த 6 பெண்கள் திடீரென மாயமானார்கள். காப்பக பாதுகாவலர் ஆய்வு செய்தபோது 6 பேர் காப்பகத்தில் இருந்து ஓட்டம் பிடித்து இருப்பது தெரிந்தது. அவர்கள் அனைவரும் 20 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் காதல் விவகாரத்தில் மீட்கப்பட்டவர்கள் என்றும் தெரிகிறது.

இதுகுறித்து சிவகாஞ்சி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்படட்டது. போலீசார் மாயமான பெண்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News