உள்ளூர் செய்திகள்

அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்ற 6 பேர் கைது

Published On 2023-11-02 15:40 IST   |   Update On 2023-11-02 15:40:00 IST
  • தருமபுரி மாவட்டத்தில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • போலீஸ் எஸ்.பி உத்தரவின் பேரில் நடவடிக்கை

தருமபுரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை வாங்கி சிலர் பதுக்கி வைத்து விற்று வருவதாக மாவட்ட எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதத்துக்கு புகார் வந்தது. அதனை தொடர்ந்து மாவட்ட போலீ சாருக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் பெரும் பாலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது் பெரும்பாலை ஆற்று பாலம் அருகே மோட்டர் சைக்கிளில் சாக்கு மூட்டையை வைத்து கொண்டு நின்று கொண்டு இருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தபோது மது விற்பனை செய்வதும், அவர்கள் கொம்பாடியூரை சேர்ந்த சண்முகம் (65) முருகேசன் (52) என தெரியவந்தது. இதனை யடுத்து 2 பேரையும் கைது செய்தனர்.

அதே போன்று பொம்மிடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வட சந்தையூர் அருகே மது விற்பனை நடப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்ததில் மது விற்றது தெரியவந்தது.

விசாரணையில் அவர் பொம்மிடி கிராமத்தை சேர்ந்த பவுனேசன் மகன் ரஞ்சித்குமார்(42) என்பது தெரியவந்தது. இதனை யடுத்து பொம்மிடி போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதே போன்று அரூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மோப்பிரிப்பட்டி கிராமத்தில் பிரியாணி கடையில் மது வைத்து விற்பதாக அரூர் போலீஸ் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி அந்த கிராமத்துக்கு சென்ற போலீசார் பிரியாணி கடையில் சோதனை செய்த போது பதுக்கி வைக்கப் பட்டிருந்த 20 பாட்டில்கள் பறிமுதல் செய்து அதே கிராமத்தை சேர்ந்த சங்கர் மகன் சத்திய ராஜ் (22) என்ற வாலிபரை கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து அரூர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அதே போன்று கம்பைநல்லூர் போலீஸ் சரக எல்லைக்கு உட்பட்ட இருமத்தூர் பகுதியில் கம்பைநல்லூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கே சாக்கு மூட்டையுடன் நின்று கொண்டிருந்த ஒரு நபரை பிடித்து விசாரணை நடத்தியதில் மது பாட்டில் களை பதுக்கி வைத்து விற்றதும், அவர் இருமத்தூர் பகுதியை சேர்ந்த பாண்டியன் மகன் நவின்குமார் என்பதும் தெரியவந்தது. இதனை யடுத்து அவரை கைது செய்தனர்.

இதே போன்று கோட்டப் பட்டி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நரிப்பள்ளி கிராமத்தில் சப்- இன்ஸ் பெக்டர் விஜயன் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அதே பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவர் மதுப்பாட்டில்களை தனது வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News