உள்ளூர் செய்திகள்

52 சதவீத உயிரிழப்பு இதய பாதிப்பால் நிகழ்கிறது-ஆய்வில் டாக்டர்கள் அதிர்ச்சி தகவல்

Published On 2023-09-30 09:53 GMT   |   Update On 2023-09-30 09:53 GMT
  • மேற்கத்திய நாடுகளில் இந்த எண்ணிக்கை 23 சதவிகிதமாக உள்ளது.
  • எண்ணை நொறுக்குத் தீனிகள் போன்ற பழக்கங்கள் இதய நோய்கள் ஏற்படும்.

 கோவை,

உலக இதய தினத்தை யொட்டி கோவை ஜி.கே.என்.எம். ஆஸ்பத்திரி டாக்டர் ராஜ்பால் கே .அபைசந்த் கூறியதாவது

இந்தியாவில் இதய நோய்களால் ஏற்படும் இறப்பு விகிதத்தில் தமி ழ்நாடு 3-வது இடத்தில் உள்ளது.

கோவை பகுதியில் நடத்திய ஆய்வில் 52 சதவி கிதம் இதய நோய்களால் இறப்புகள் 70 வயதுக்கு முன்பே நிகழ்கின்றன. மேற்கத்திய நாடுகளில் இந்த எண்ணிக்கை 23 சதவிகிதமாக உள்ளது.

புகைப் பிடித்தல், அதிக ப்படியாக மது அருந்துதல், உட்கார்ந்த வாழ்க்கை முறை மற்றும் எண்ணை நொறு க்குத் தீனிகள் போன்ற பழக்கங்கள் இதய நோய்கள் ஏற்படும்.ஆரோக்கியமான வாழ்க்கை அம்சங்களைப் பற்றி கவனமாக இல்லாத வர்கள் கரோனரி தமனி நோயால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. கரோனரி தமனி நோய்க்கு கரோனரி ஆஞ்சியோ பிளாஸ்டி மற்றும் ஸ்டென்ட் பிளேஸ்மென்ட் சிகிச்சை ஆகும். இது அடைபட்ட இதயத் தமனிகளைத் திறக்கும் குறைந்தபட்ச ஊடுருவும் செயல்முறை யாகும். இவ்வாறு அவர் கூறினார்.

கோவை கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரி டாக்டர் தாமஸ் அலெக்சாண்டர் கூறியதா வது:-

பெருநாடி ஸ்டெனோ சிஸை எதிர்த்துப் போராட, மருத்துவ வல்லுநர்கள் டிரான்ஸ்கேதீட்டர் பெருநாடி வால்வு மாற்ற த்தை ஏற்றுக்கொண்டனர். இது குறைந்த வலி மற்றும் விரைவான மீட்பு செயல்முறை ஆகும். சிகிச்சையின் போது பெரும்பாலும் குறுகிய காலம் மருத்துவமனையில் தங்கி இருந்தால் போதும். மேலும் நோயாளியின் சுமையை குறைக்கிறது மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News