தக்காளி, பீன்ஸ் பயிர்களுக்கு தாங்கு குச்சி தடுப்பு அமைக்க 50 சதவீதம் மானியம்
- தோட்டக் கலைத்துறை மூலம் நடப் பாண்டில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் ரூ.99.20 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.
- நிரந்தர கல்பந்தல் அமைப்பதற்கு 50 சதவீத மானியமாக ஒரு எக்டேருக்கு ரூ.2 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் காய்கறி பயிர்களில் தக்காளி மற்றும் பீன்ஸ் அதிக அளவில் பயிரிப்படுகிறது.
இவற்றில் பெரும்பாலா னவை வீரிய ஒட்டு ரகங்கள், இவை நன்கு வளர்ந்து கொண்டே காய்க்கும் தன்மை உடையது.
இந்த ரகங்களை சாதா ரண நடவு முறையில் நடவு செய்து பராமரிக்கப்படும் போது, அதனுடைய வளர்ச்சி, காய்க்கும் திறன் குறைந்து வருகிறது.
மேலும், 3 முதல் 5-வது முறை அறுவடையின் போதே பணியாட்களின் கால்களில் மிதிக்கப்பட்டு செடிகள் பாதிப்பு அடையும்.
இதனால் மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க "டிரெல்லிஸ்" என்ற கொடிகளை தாங்கும் தடுப்பு குச்சிகள் அமைத்து கயிற்றில் செடிகளை கட்டி படர விட்டு வளர்க்கும் முறைக்கு தோட்டக்கலை துறை சார்பில் நடப் பாண்டில் 50 சதவீத மானிய மாக ஒரு எக்டேருக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது.
பீன்ஸ் மற்றும் தக்காளியில் தாங்கு குச்சி கட்டுவதால், செடிகள் தரையில் படராமல் மேல்நோக்கி வளர உதவு கிறது.
மண்ணிலிருந்து மேல்நோக்கி வளருவதால் பூச்சி மற்றும் அழுகல் நோயின் தாக்கத்தை குறைக்கிறது.
சூரிய ஒளியானது தாவரத்தின் அனைத்து பாகங்களுக்கும் சென்ற டைய உதவுகிறது. செடி களை நிலைநிறுத்தி, அதிக மழை மற்றும் காற்றில் இருந்து சாய்ந்து விடும் அபாயத்தை குறைக்கிறது. சீரான வளர்ச்சியை ஊக்கு விக்கிறது.
மேலும், பழங்கள் தரையில் படாமல் இருப்ப தால் சேதம் ஏற்படாமல் மகசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இம்முறை யில் நல்ல வரிசை இடை வெளி இருப்பதால் அறு வடையை எளிதாக்குகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோட்டக் கலைத்துறை மூலம் நடப் பாண்டில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் ரூ.99.20 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.
மேலும், இத்திட்டத்தில் முருங்கை நாற்றுகள் ஒரு எக்டேருக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் நிரந்தர கல்பந்தல் அமைப்பதற்கு 50 சதவீத மானியமாக ஒரு எக்டேருக்கு ரூ.2 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது.
ஆதிதிராடவிர், பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும், இந்த திட்டத்தின் 80 சதவீத இலக்கானது கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட உள்ளது.
மேலும், டிரெல்லிஸ் திட்டத்தில் சொட்டு நீர் பாசன முறையை கடை பிடித்தால் நீர் செலவை குறைத்து அதிக மகசூல் பெறலாம். ஒரு பயனாளி அதிகபட்சமாக ஒரு எக்டேர் வரை பெற்று பயன் பெறலாம்.
மேலும், இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவ சாயிகள் உரிய ஆவணங் களுடன் சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலு வலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
மேலும், உழவன் செயலி மற்றும் தமிழ்நாடு தோட்டக்கலை வலைதளம் போன்ற இணைய வலை தளங்கள் மூலம் விண்ணப் பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.