உள்ளூர் செய்திகள்
சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 5 பேர் கைது
- போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.
- அவர்களிடம் இருந்து மொத்தம் 500 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பசலைராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வெவ்வேறு இடங்களில் தனித்தனியாக சாராயம் விற்றதாக மூலக்காடு கிராமத்தை சேர்ந்த குமார் (வயது49), ஆனைமடுவு ஆனந்தன் (28), புளியங்கோட்டைபிரபு (31), ஏழுமலை (34) மற்றும் கொடியனூர் வெள்ளையன் (40) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மொத்தம் 500 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.