உள்ளூர் செய்திகள்

தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் சாந்தி மக்களிடம் குறைகளை கேட்டறிந்த போது எடுத்த படம்.

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 461 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு

Published On 2023-10-17 15:44 IST   |   Update On 2023-10-17 15:44:00 IST
  • மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது
  • மனுக்கள் மீதான தீர்வினை விரைந்து காண வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தருமபுரி,

தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள்குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கி.சாந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில்பொது மக்களிட மிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு, மாவட்ட கலெக்டர் தெரிவித்த தாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தி யுள்ளார். அந்த வகையில் ஒவ்வொரு வாரம்திங்கட்கி ழமைகளில் நடைபெறும் மக்கள்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்க ளிடமிருந்து பல்வேறு கோரிக்கைமனுக்களை பெறப்பட்டு, தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய தீர்வுகள் காணப்பட்டு வருகிறது.

நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா வேண்டுதல், சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்ப டபல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திற னாளிகளுக்கு உதவித்தொ கைகள், உதவி உபகர ணங்கள் வேண்டியும் மொத்தம் 461 மனுக்கள்வரப்பெற்றன.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள்அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ஆர்.பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News